சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சீட்டில் கிடந்த 310 கிராம் தங்க செயின் – போட்டது யார் ? விசாரணை

trichy-airport-singapore gold

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் கிடந்த இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவதுண்டு. அங்கு அதிக அளவில் கடத்தல் பொருட்கள் சிக்குவதுமுண்டு.

சிங்கப்பூர் to இந்தியா… இந்த பகுதிக்கு செல்வோர் கவனத்திற்கு – 7 நாள் தனிமை கட்டாயம்!

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

அப்போது பயணிகள் அமரும் இருக்கையில் கேட்பாரற்று தங்க சங்கிலி ஒன்று கிடந்ததாக தூய்மை செய்யும் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சோதனை செய்ததில் அது 310 கிராம் எடையுள்ள தங்க சங்கலி என்றும், அதன் மதிப்பு ரூ.17.07 லட்சம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்தது யார்? இருக்கையில் போட்டது யார், போட்டது ஏன் ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்திய ஊழியர் மரணம்: மற்றொரு ஊழியர் சிகிச்சையில்… இந்தியர் குடும்பத்துக்கு உதவ தகவல் கோரல்