“சிங்கப்பூர் அரசுமுறைப் பயணம் மிகவும் உபயோகமாக அமைந்தது”- தமிழக அமைச்சர் பெருமிதம்!

Photo: Wikipedia

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பாக, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசுமுறைப் பயணமாக ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 14- ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

தமிழ் உள்ளிட்ட 11 மொழிகள் பேசும் 23 வயதான சிங்கப்பூரரர்… கொரோனா காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய நல்லுள்ளம்

தமிழக அமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் முக்கியமாக செம்மொழிப் பூங்கா, செங்காந்தள் பூங்கா, மாதவரம் பூங்கா, வண்ணாரப்பேட்டை பூங்கா போன்ற இடங்களை பயன்படுத்தவும், சிங்கப்பூர் மற்றும் மேலைநாடுகளில் உபயோகப்படுத்துகின்ற பூங்காக்களின் தரத்திற்கு இணையாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையிலும் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்களை மேம்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஜூலை 13- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவானது எவ்வாறு பராமரிக்கப்படுகிறது எனவும், பூங்காவில் வளர்க்கப்படும் மரங்கள் மற்றும் இதர பூக்கள் வகையறா போன்றவைகள் குறித்து, சிங்கப்பூர் தேசிய பூங்காவின் முதுநிலை பூங்கா இயக்குநர் சூவா ஹாக் சியாங், துணை இயக்குநர் (நூலகம், பயிற்சி மற்றும் விரிவாக்கம், பாதுகாப்பு) பேராசிரியர் நூரா Bte. அப்துல் கரீம் ஆகியோர் அப்பூங்கா எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினர். இதனை தொடர்ந்து தேசிய தாவரவியல் பூங்காவின் துறை அலுவலர்களுடன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆய்வு செய்தனர்.

பின்னர் சிங்கப்பூர் மெரினா நீர்த் தேக்கத்தின் அருகில் ‘Gardens by the Bay’ என்ற மற்றொரு பூங்காவினையும், முதுநிலை இயக்குநர், பூங்கா பராமரிப்பு கேரி சூவா (Gary Chuo) உதவி முதுநிலை நிர்வாக அலுவலர் மே யோ (May Yeo) ஆகியோர் அப்பூங்காவின் சிறப்பு அம்சங்களையும், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து பூக்களின் வகைகள், ரோஜா தோட்டம், உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நீர்வீழ்ச்சி அமைப்பு, செயற்கை நீர் ஊற்று போன்ற பல புதிய அம்சங்களை பார்வையிட்டு அப்பூங்கா எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, அதன் பயன்பாடு மக்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொண்டனர். மேலும் மரங்கள் வண்ண விளக்குகளோடு எவ்வாறு காட்சிப் படுத்தப்படுகின்றன என்பதை நேரடியாக பார்வையிடப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களின் வேலைக்கு புதிய சிக்கல்… 2 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறையலாம் – MOM எச்சரிக்கை

ஜூலை 14- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் ஜுவல் சாங்கி (Jewel Changi) பூங்காவினை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரை சார்ந்த உயர் அலுவலர் பிரபாகர், I.R.S. உடன் இருந்தார். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் தமிழகத்தில் உள்ள பூங்காக்களை மேம்படுத்திட தேவையான திட்டங்களை உருவாக்கிட சிங்கப்பூர் அரசு முறைப் பயணம் மிகவும் உபயோகமாக அமைந்தது என்று வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.