நான்கு நாடு/பகுதிகளுக்கான VTL சேவையை தொடங்க உள்ளது சிங்கப்பூர் – பிப். 22 முதல் VTP அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூர் புதிய தடுப்பூசி பயண ஏற்பாட்டை (VTL) ஹாங்காங்குடன் தொடங்க உள்ளதாக இன்று (பிப். 16) அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்தது.

அதாவது, ஹாங்காங்குடனான VTL ஏற்பாடு வரும் பிப்ரவரி 25 அன்று தொடங்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

Breaking: சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எளிமை!! – பிப்ரவரி 21 முதல் நடைமுறை!

அதே போல முன்னர் ஒத்திவைக்கப்பட்ட கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றுடன் VTL சேவை பிப்ரவரி 25 அன்று தொடங்கப்படும்.

மேற்கண்ட அந்த நான்கு நாடுகள்/பிராந்தியங்களில் இருந்து சிங்கப்பூர் வர, VTP அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 22 அன்று காலை 10 மணிக்கு திறக்கப்படும்.

சிங்கப்பூர் “முழு தடுப்பூசி போடப்பட்ட பயண ஏற்பாட்டை” இலக்காக கொண்டு செயல்படுவதால், மற்ற இடங்களுடனான VTL சேவைகள் படிப்படியாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மூடப்பட்ட 2,200 கட்டுமான நிறுவனங்கள் – வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?