சிங்கப்பூரில் வேலையிடத்தில் நிகழக்கூடிய உயிர் சேதம் தொடர்ந்து அதிகமாகி இருக்கிறது. இந்த நிலையில், மனிதவள அமைச்சகம் தனது அமலாக்க முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இரண்டு நிறுவனங்களின் வேலைஇடங்களில் வேலை நடைமுறைகள் பாதுகாப்பு அற்றவையாக இருந்ததால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டு நிறுவனங்களும் மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டுமானால் அவை பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகளைச் சரிப்படுத்த வேண்டும்.
வேலையிட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிடங்களில் காணப்பட்ட பாதுகாப்பற்ற நடைமுறைகளைக் காட்டும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது.
அந்த நிறுவனங்களின் இரண்டு வேலையிடங்களிலும் காணப்பட்ட நடைமுறைகள் ஏற்றுக்கொள்ள முடி யாதவையாக இருந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் சூடுபிடிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், ஒப்பந்தக்காரர்கள் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும். ஊழியர்களுக்கு வேலை இடங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் ஜூலை 20ஆம் தேதி வரை வேலையிடங்களில் 31 மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
பாதுகாப்பு இல்லாத வேலை நடைமுறைகளைப் பற்றி தெரிந்தால் அது பற்றி பொதுமக்கள் mom.gov.sg/report-wsh-issues என்ற முகவரியில் தெரியப்படுத்தலாம். அல்லது 6438-5122 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.