ஆறு சக்கர லாரி மோதி சிங்கப்பூரர் பலி: “பைக் ஓட்ட வேண்டாம்” – பெற்றோர் போட்ட கட்டளையை மீறியவரின் சோக முடிவு

singaporean-man-killed-phuket-motorcycle-accident
Shin Min Daily News

ஆறு சக்கர லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் நாட்டவர் (29) உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தாய்லாந்தின் ஃபூகெட் நகரில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காலை நடந்தது குறிப்பிடத்தக்கது.

லாரி பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் Blood moon என்னும் சிவப்பு நிலா சந்திர கிரகணம்: எங்கே காணலாம்?

பென் என்ற அவரின் 29 வயது காதலி அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றார் என்றும், அதிஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று பென்னின் பெற்றோர் கட்டளை போட்டு இருந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், அதனாலேயே அவரின் மரணம் ஏற்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

பென்னின் உடல் நவ.6ம் தேதி காலை சிங்கப்பூர் வந்தடைந்தது.

இந்நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாளை நவ.9ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்… பதறிய புலம்பெயர்ந்த 300 பேர் – விரைந்து சென்று காப்பாற்றிய சிங்கப்பூர் அதிகாரிகள்