பாறையிலிருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் பெண் பலி.. 12 மணிநேரம் இடைவிடாது கதறி அழும் கணவர்

singaporean-woman-died-in-new-york
Rauf Said/Facebook

நியூயார்க்கில் உள்ள Minnewaska ஸ்டேட் பூங்காவில் 30 மீட்டர் உயர செங்குத்தான பாறையிலிருந்து கீழே விழுந்த 39 வயதான சிங்கப்பூர் பெண் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது கணவர் அப்துல் ரவூப் முகமது சேட் கடந்த டிசம்பர் 23 அன்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: 14 ஆண்கள் கைது – ஆணுறைகள் பறிமுதல்

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“என் இதயம் சுக்குநூறாக உடைந்துவிட்டது, அவற்றை மீண்டும் எவ்வாறு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை” என அவர் கவலையுடன் கூறினார்.

நூர் ஐஸ்யா என்ற அந்த பெண், 30 மீட்டர் உயர பாறை குன்றிலிருந்து தவறி விழுந்ததாக ரவூப் விளக்கினார்.

இதனை அடுத்து மருத்துவ ஊழியர்கள் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் போராடியும், அவரை காப்பற்ற முடியவில்லை என அவர் சொன்னார்.

இன்று டிச.25 காலையிலேயே பிரேதப் பரிசோதனைகள் முடிந்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், உடல் அடக்கம் செய்வதற்காக சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: 14 ஆண்கள் கைது – ஆணுறைகள் பறிமுதல்