லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: 14 ஆண்கள் கைது – ஆணுறைகள் பறிமுதல்

little india 14 arrested condoms seized
Singapore Police Force

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 146 பெண்கள் மற்றும் 36 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த நவம்பர் 20 மற்றும் நவம்பர் 25 க்கும் இடையில் நடந்த சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

இந்திய விமான நிலையங்களில் மீண்டும் RT-PCR சோதனையா?

இந்த சோதனை லிட்டில் இந்தியா, போட் கீ, புகிஸ் மற்றும் சைனாடவுனில் உள்ள மசாஜ் கடைகள், பொது பொழுதுபோக்கு கடைகள் மற்றும் தனியார் இடங்களில் நடந்தது.

மேலும் இதில் 5 பொது பொழுதுபோக்கு கடைகள் உரிமம் தொடர்பான பல்வேறு நிபந்தனைகளை மீறியது கண்டறியப்பட்டது.

Police conducting raid at a shophouse in Little India. Photo: Singapore Police Force
SPF

லிட்டில் இந்தியாவிலுள்ள ஒரு கடைவீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் 18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 14 நபர்கள் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

SPF

மேலும் அந்த சோதனையின் போது கடைவீட்டில் ஆணுறைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவு முழுவதும் கடந்த நவம்பர் 15 முதல் கடந்த டிசம்பர் 18 வரை பலத்த சோதனை நடந்துள்ளது.

பல சோதனை நடவடிக்கையில் மொத்தம் 885 ஆண்களும் 509 பெண்களும் பல்வேறு குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளனர்.

“இந்தியாவுக்கு திரும்பி போ” – 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரை கொச்சைப்படுத்திய டாக்ஸி ஓட்டுநர்