இந்தியாவில் மீண்டும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.
இதனால், விமான நிலையங்களில் கட்டாய கோவிட்-19 RT-PCR சோதனை நடைபெறுமா என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருந்தது.
இதனை தெளிவுப்படுத்திய இந்திய அரசு, பயணிகளுக்கு விமான நிலையங்களில் RT-PCR சோதனை கட்டாயமாக்கும் திட்டமில்லை என தற்போது கூறியுள்ளது.
JN.1 கோவிட் வகை கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கவலைப்பட தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிச.20 வரை உள்ள நிலவரப்படி, 21 பேர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுவதால் மருத்துவமனை நிரம்பும் அபாயம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
ஆகையால், விமான நிலையங்களில் இப்போது வரை எந்த சோதனைகளும் இல்லை என்பது சந்தோசம்.
அசால்ட்டாக வளம் வந்த “கருநாகப்பாம்பு” – சிங்கப்பூரில் அதிகம் காணப்படாத காட்சி