சிங்கப்பூரில் தொய்வின்றி தங்களது பணிகளை மேற்கொண்டுவரும் முன்னிலை ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டு (காணொளி)..!

Singaporeans making claps for appreciating Leading Employees In Singapore 
Singaporeans making claps for appreciating Leading Employees In Singapore 

சிங்கப்பூரில் தொய்வின்றி தங்களது பணிகளை மேற்கொண்டுவரும் முன்னிலை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

இதற்காக முகநூல் வாயிலாக பொது­மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்டது. இதில் சரியாக இரவு 8 மணிக்கு அனைவரும் வீடுகளில் இருந்து கைதட்டி தங்கள் பாராட்டை தெரிவிக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவர்கள், தாதியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பேரங்காடி ஊழியர்கள், பொருள் விநியோக ஊழியர்கள், பொருள் சேமிப்புக் கிடங்கு ஊழியர்கள், பாதுகாவலர்கள் உட்பட சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அனைவரும் முன்னிலை ஊழியர்களில் அடங்குவர்.

இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து சிங்கப்பூரிலும் அதே பாணியில் முன்னிலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்களின் கைதட்டல் காணொளியை பலர் சமூக ஊடகங்களில் #SGUnited என்ற குறியீட்டுடன் பதிவிட்டு வருகின்றனர்.