ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 0.8%-ஐ விற்றது சிங்டெல்!

File Photo: AFP

 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் (Bharti Airtel). இந்த நிறுவனத்திடம் மொத்தம் 29.8% பங்குகளைக் கொண்டிருந்தது சிங்கப்பூரின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் (Singtel).

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்.. ஜூலை முதல்

இந்த நிலையில், இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பாரதி ஏர்டெல் நிறுவனம் லாபத்துடன் இயங்கி வந்த நிலையில், ஆப்பிரிக்காவில் உள்ளூர் நாணயங்களின் மதிப்பு சரிந்தது. இந்த சூழலில், பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இருக்கும் பங்குகளில் 0.8% பங்குகளை அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான ‘GQG Partners’ என்ற நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளது. இந்த பரிவர்த்தனை இந்திய தேசிய பங்குச்சந்தையில் (NSE) இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு நற்செய்தி.. இனி சிரமம் இருக்காது

ஒரு பங்கின் விலை ரூபாய் 1,193.70 என்ற அளவில் விற்பனையானது. இதன் மூலம் ஏறக்குறைய 950 மில்லியன் டாலர் பெறப்பட்டுள்ளதாக சிங்டெல் கணித்துள்ளது. அதேபோல், சிங்டெல் நிறுவனத்தின் காலாண்டுக்கான நிகர லாபம் 12.5% குறைந்து, 465 மில்லியன் டாலராக பதிவானது. இதற்கு காரணம், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின்