பழத்தைத் திருடியதாக ஆவேசம்! – தங்கையின் முன்னாள் கணவரை கத்தியால் தாக்கியவருக்குச் சிறை!

knife slash

சிங்கப்பூரில் வேண்டுமென்றே தனது சகோதரியின் முன்னாள் கணவரை கத்தியால் தாக்கிய நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.56 வயதான பொங் யோக் லொங் என்பவர் அவரது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 11 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொங்கின் தங்கையும் அவரது கணவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டனர்.இருப்பினும் சில காரணங்களுக்காக பொங்,அவரது தங்கை மற்றும் தங்கையின் முன்னாள் கணவர் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.

தங்கையின் விவாகரத்துக்குப் பின்பு பொங்கிற்கும் அந்த நபருக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்தது.அவர்கள் இருவரும் தங்கியிருக்கும் வீட்டு வாசலில் செடி வளர்த்து வந்தனர்.அந்தச் செடியை வைத்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது உண்டு.

கடந்த மே மாதம் ,தான் வளர்த்த செடியிலிருந்த பழம் ஒன்று காணாமல் போனதைப் பொங் கவனித்தார். ஆத்திரமடைந்த அவர் பழத்தை தமது தங்கையின் முன்னாள் கணவர் வேண்டுமென்றே பறித்ததாக எண்ணினார்.

அன்றிரவு குடிபோதையில் வீடு திரும்பிய பொங், அந்த நபரைக் கத்தியால் குத்தினார்.பொங் குடிபோதையில் தாக்க வருவதைக் கவனித்த நபர் அவரைத் தடுக்க முயன்றதால் சிறிய காயங்களுடன் தப்பினார்.