சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்

Dailythanthi

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த தமிழக ஊழியரை அவரின் மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசினம்பட்டியை பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஊழியர் செல்வம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை

பக்கவாத நோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட செல்வம் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்க திரும்பி அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவரின் மகனான 22 வயதுமிக்க முகுந்தன் கல்லூரியில் படிக்கும்போதே தகாத நண்பர்கள் பழக்கம் காரணமாக குடி பழக்கம் இருந்துள்ளது, ஊருக்கு வந்த செல்வம் இதனை கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக தந்தை-மகன் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. படிப்பை முடித்த முகுந்தன் கட்டட வேலை செய்து வருகிறார்.

ஒரு முறை போதை ஏறவில்லை என கூடுதலாக மது குடிக்க தந்தையிடம் கூடுதலாக பணம் கேட்டுள்ளார் முகுந்தன்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, தான் அணிந்திருந்த பனியனை கழற்றி செல்வத்தின் கழுத்தை சுற்றி நெறித்து கொலை செய்து உள்ளார் முகுந்தன்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் முகுந்தனை கைது செய்தனர்.

பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியுமா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே!