விமானத்தின் கழிவறையில் சிக்கி கொண்ட இந்திய பயணி.. பயணம் முழுவதும் சிக்கி தவித்த பரிதாபம்

Photo: SpiceJet

இந்திய விமான பயணி ஒருவர் கழிவறையில் சிக்கிக்கொண்டு முழு பயணத்தின்போதும் அங்கேயே இருந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

கழிவறையின் கதவு திறக்க முடியாதபடி மாட்டிக்கொண்ட காரணத்தால் அவர் ஒரு மணிநேரம் அதனுள்ளே சிக்கி தவித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வாடகை, உயரும் செலவுகள்.. கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்

இந்த சம்பவம் மும்பையில் இருந்து பெங்களூரு சென்றபோது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மும்பையில் இருந்து கிளம்பியது.

பின்னர் விமானம் பெங்களூருவில் தரையிறங்கிய பின்னரே பயணி மீட்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கான விமான கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

பயணி உள்ளே சிக்கிக்கொண்டு இருந்த வேளையில் பயப்பட வேண்டாம் என்று அவருக்கு துண்டு சீட்டு கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பணிப்பெண்ணுக்கு கடும் நோய்.. எகிறும் மருத்துவ செலவு – உதவி கோரும் சிங்கப்பூர் முதலாளி