குளியலறையில் ரகசிய கேமரா..மனைவியின் சகோதரிகள் குளிப்பதை வீடியோ எடுத்த ஆடவர் – குற்றச்சாட்டு!

ஆடவர் ஒருவர் தனது மாமியார் வீட்டின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச வீடியோக்களை எடுத்து பிடிபட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அவர் மாமியார் வீட்டிற்கு மூன்று முறை சென்றபோது, ​​​​பிரஷ் மற்றும் ஸ்க்ரப்களின் கூடையில் பின்ஹோல் என்னும் ரகசிய கேமராவுடன் கூடிய பேனாவைக் கொண்டு வந்து வைத்துள்ளார்.

சுட்டெரிக்கும் வெயில்…வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? – அதிரடி ஆய்வு.!

அவரது மனைவியின் 30 வயது நிரம்பிய சகோதரிகள் இருவர் கழிப்பறையைப் பயன்படுத்துவதையும் குளிப்பதையும் அந்த கேமரா படம்பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

31 வயதான அந்த ஆடவர் இந்த தவறான செயலுக்காக மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 14) ஒப்புக்கொண்டார். மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்.

அவருக்கு 16 முதல் 20 வாரங்கள் வரை சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், அவர் மீது அடுத்த மாதம் வழக்கு விசாரணை வரும் என கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், 2019இல் மூன்று முறை தன் அலுவலக பெண்கள் மூவர் கழிப்பறையைப் பயன்படுத்தும் வீடியோவையும் அவர் எடுத்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!