“ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அரவான் களப்பலி நடைபெறும்” என அறிவிப்பு!

"ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அரவான் களப்பலி நடைபெறும்" என அறிவிப்பு!
Photo: HEB

 

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple), வரும் அக்டோபர் 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ அரவான் களப்பலி (Sri Aravan Kalapali) நிகழ்வு நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

“கிரேன் வருது நில்லுங்க” – வெளிநாட்டு ஊழியரின் குரல்.. தொண்டையில் தாக்கிய உலோக துண்டு.. மரணத்தை எட்டி பார்த்த பெண்

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 13- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ அரவான் களப்பலி நிகழ்வு நடைபெறும். அன்றைய தினம் மாலை 06.00 மணிக்கு கோயிலில் மாரியம்மனுக்கு பூஜையும், இரவு 07.30 மணிக்கு ஸ்ரீ அரவான் களப்பலி நிகழ்வும், இரவு 09.15 மணிக்கு ஸ்ரீ திரௌபதை சன்னதியில் தீபாராதனையும் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு பூஜைகள் அனைத்தையும் பக்தர்கள், கோயில் வளாகத்தில் இருந்து நேரடியாகப் பார்க்கலாம்.

ஹென்டர்சன் சாலை அருகே கண்டெடுக்கப்பட்ட ஆடவர் சடலம்.. யார் ?

அதேபோல், அக்டோபர் 13- ஆம் தேதி அன்று இரவு 07.30 மணி முதல் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் நிகழ்வுகளை இந்து அறக்கட்டளை வாரியத்தின் https://youtu.be/4oe15XLqHEY என்ற யூடியூப் பக்கத்திலும், https://www.facebook.com/hinduendowmentsboard என்ற ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்திலும் நேரலையில் பார்க்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064  என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணையையோ (அல்லது) https://heb.org.sg/fw2023 என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.