ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரெளபதை அம்மன் திருக்கல்யாணம்!

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரெளபதை அம்மன் திருக்கல்யாணம்
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கல்யாணம் (Sri Drowpathai Amman Thirukkalyanam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

முதியவர் ATM கார்டை பயன்படுத்தி S$162,000 பணத்தை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் செப்டம்பர் 04- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 06.30 மணிக்கு மாலையிடுதலும், இரவு 07.00 மணிக்கு திருக்கல்யாணம் வைபவமும், இரவு 08.30 மணிக்கு மாங்கல்ய தாரணமும், இரவு 08.45 மணிக்கு ஸ்ரீ அர்ஜுனன் மற்றும் கல்யாண திரௌபதை அம்மன் கோயிலில் வலம் வருதலும், இரவு 09.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும்.

கோயில் வளாகத்தில் அமர்ந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டுப் பூஜைகளைப் பார்க்கலாம். இந்த பூஜைகளில் நேரலையை மாலை 06.15 மணி முதல் இந்து அறக்கட்டளை வாரியத்தின் https://www.youtube.com/hinduendowmentsboard என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் இணையதளப் பக்கத்தில் பார்வையிடலாம்.

பாலத்தின் கீழ் தவறான செயலை செய்த வெளிநாட்டவர்.. S$2,500 அபாரதம் விதிப்பு

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.