மார்ச் 29- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Google Maps

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் கெய்லாங் ஈஸ்ட் அவனியூ 2-ல் (Geylang East Ave-2) உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple) நாளை (29/03/2022) பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது. நாளை (29/03/2022) மாலை 04.20 மணி முதல் மாலை 05.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பத்தர்கள் http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களும், வில்வ அர்ச்சனையையும் செலுத்தி விடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க முடியும். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயிலின் அலுவலக எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.