ஜனவரி 2- ஆம் தேதி அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி!

Photo: Sri Srinivasa Perumal Temple

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) வரும் ஜனவரி 2- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி (Sri Vaikunda Ekadasi) வழிபாடு நடத்தப்படவுள்ளது. மேலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி நாளில் பால்குடம் செலுத்த விரும்புவோர், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். அந்த பால்குடத்தை ஏகாதசி நாளில் காலை 07.30 மணிக்கு செலுத்தலாம். அதேபோல், அன்றைய தினம் காலை 06.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்காதீங்க…வெளிநாட்டு ஊழியர்களின் கவனத்திற்கு!

வரும் டிசம்பர் 31- ஆம் தேதி அன்று இரவு 10.30 மணி முதல் ஜனவரி 3- ஆம் தேதி காலை 07.00 மணி வரை கார் பார்க்கிங் மூடப்பட்டிருக்கும். கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செலுத்த முடியாதவர்கள்,வீட்டில் இருந்த படியே சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளை காணும் வகையில், ஜனவரி- 2 ஆம் தேதி அன்று காலை 06.00 மணி முதல் ஃபேஸ்புக், யூ-டியூப் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 2- ஆம் தேதி அன்று இரவு 07.00 மணி முதல் ஜனவரி 3- ஆம் தேதி அன்று அதிகாலை 04.30 மணி வரை பக்தர்களுக்காக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டறையில் தீ விபத்து: 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தின் 62985771 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ https://heb.org.sg/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.