ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உத்சவம்!

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உத்சவம்!
Photo: Hindu Endowments Board Official Facebook Page

 

 

சிங்கப்பூரில் சிராங்கூன் சாலையில் (Serangoon Road) அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில், வரும் ஜூன் 3- ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஜூன் 12- ஆம் தேதி திங்கள்கிழமை வரை வசந்த உத்சவம் (Vasantha Uthsavam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.

லாரி, பேருந்து, பைக் விபத்து: 26 வயதான ஆடவர் மரணம்

அதன்படி, ஜூன் 3- ஆம் தேதி முதல் ஜூன் 11- ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 06.45 மணிக்கு திருமஞ்சனம், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜை, மாலை 06.45 மணிக்கு உபய பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம், இரவு 07.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஜூன் 12- ஆம் தேதி அன்று காலை 06.45 மணிக்கு திருமஞ்சனம், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜை, இரவு 07.00 மணிக்கு உபய பூஜை, இரவு 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடு, இரவு 08.00 மணிக்கு பிரசாதம் விநியோகம் நடைபெறும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தனது இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

இந்த வசந்த உத்சவம் நாட்களில் பக்தர்களுக்காக இசை சொற்பொழிவு, வயலின் கச்சேரி, வீணை இசை, பரத நாட்டியம், வாத்திய இசை, இந்துஸ்தானி பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.