ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சந்தனகுட அபிஷேகம்!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple), காளியம்மனுக்கு சந்தனகுட அபிஷேகம் (Sri Kaliamman Santhanakuda Abishegam) நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

இது தொடர்பான அறிவிப்பில், “வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி புதன்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் காளியம்மனுக்கு சந்தன்குட அபிஷேகம் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 9- ஆம் தேதி காலை 07.30 மணிக்கு சங்கல்பமும், விக்னேஸ்வர பூஜையும், ஹோமமும் நடைபெறவுள்ளது. காலை 09.30 மணிக்கு காளியம்மனுக்கு சந்தனகுட அபிஷேகம் நடைபெறுகிறது; இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.

காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லலிதா த்ரிசதி அர்ச்சனையும், காலை 11.00 மணிக்கு மஹா தீபாராதனையும், காலை 11.30 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.

லிஷா & லிஷா இலக்கிய மன்றம் இணைந்து வழங்கும் சிறப்பு பட்டிமன்றம்!

காலை 09.30 மணி முதல், சந்தனகுடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.