மோட்டார் சைக்கிள் திருட்டு: 17 வயதுமிக்க மூன்று பேர் கைது

Pexels

பாசிர் ரிஸில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பான சந்தேகத்தின் பேரில் 17 வயதுமிக்க மூன்று இளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையின் படி, மூவரும் கடந்த செப்.13 அன்று மதியம் 2 மணியளவில் சுமார் S$8,500 மதிப்புள்ள Yamaha Sniper மோட்டார் சைக்கிளை திருடியதாகக் கூறப்படுகிறது.

இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் விபத்தில் சிக்கி மரணம்

இந்தச் சம்பவம் பிளாக் 199A பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 12 அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது..

இது குறித்து செப்., 15 ஆம் தேதி அன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணைகள் மற்றும் சிசிடிவி ஆகியவற்றின் உதவியுடன் அதிகாரிகள் மூன்று இளைஞர்களின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களை அதே நாளில் கைது செய்தனர்.

இதனை அடுத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட் ஆகியவையும் மீட்கப்பட்டன.

மூன்று வாலிபர்களில் ஒருவர் மீது நேற்று முன்தினம் செப்.18-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்