சிங்கப்பூரில் ஆங்கிலம் பேசத் தெரியாததற்காக சிறுவன் கொடுமை… போலீசில் புகார் செய்த தாய்

boy-bullied-english
Shin Min Daily News

சிங்கப்பூரில் உள்ள சர்வதேசப் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுவனை மற்ற நான்கு மாணவர்கள் பலமுறை கிண்டல் செய்து கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அதோடு அவருக்கு காயத்தையும் அவர்கள் ஏற்படுத்தியதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தமிழ் ஊழியர்களுக்கு நற்செய்தி… இனி ஒரு நிமிடத்தில் பணத்தை அனுப்ப முடியும்

சிறுவனின் தாய், சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர். வங்கி மேலாளரான அவர், சமீபத்திய இந்த சம்பவம் குறித்தும் தனது மகனுக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டது குறித்தும் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இது குறித்து புகாரளிக்கப்பட்டதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

கனேடியன் இன்டர்நேஷனல் பள்ளியில் (சிஐஎஸ்) படிக்கும் அவரது மகனுக்கு ஆங்கிலம் சரியாக பேசத் தெரியாத காரணத்தால் அந்த நான்கு மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

இதையடுத்து, இந்த ஆண்டு பிப்ரவரியில், மகனின் முதுகில் கீறல் காயங்கள் இருந்ததாகவும், அது அவர்களின் வேலை தான் என்றும் தாய் சொன்னார்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 17 அன்று, அதே வகுப்பை சேர்ந்த மாணவர் ஒருவர் சிறுவனை இடறி தள்ளியதால், அவனது முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறிய பள்ளி நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வேன் தானாக சறுக்கி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக பலி