மாணவருக்கு ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆசிரியர்…. சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

indian-origin-singapore-jailed

 

சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவருக்கு, பள்ளி ஆசிரியரே ஸ்மார்ட்போனில் ஆபாசக் காணொளிகளைக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்த மாணவரின் வயது 17 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை

பள்ளி ஆசிரியர் தன்னிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டியது குறித்து மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் உடனடியாக பள்ளிச் சென்று நடந்த சம்பவத்தை பள்ளியின் முதல்வரிடம் விவரித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட ஆசிரியரை அழைத்துப் பள்ளி நிர்வாகம் விசாரித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் தனது பணியை ராஜினாமா செய்தார். எனினும், மாணவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. மாணவரின் மன உளைச்சலைக் குறைக்கவே, ஆபாசக் காணொளிகளைக் காட்டியதாக ஆசிரியர் தரப்பில் இறுதி வாதம் முன் வைக்கப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதி, பள்ளி மாணவருக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டியது நிரூபிக்கப்பட்டதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

“தேசிய தின பேரணி உரையில் கலந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு”- அழைப்பு விடுத்த சிங்கப்பூர் பிரதமர்!

அதைத் தொடர்ந்து, ஆசிரியருக்கு ஜூலை 06- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 54 நாட்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, 49 வயதான ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.