போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 24 பேர் கைது

suspected-members-of-unlawful-societies-arrested
The Singapore Police Force

சிங்கப்பூரில் போலீஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 17 முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நவ.4 மற்றும் 30க்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு மாத கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உறவினரை பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் – சாலையை கடக்கும்போது டாக்ஸி மோதி ஆடவர் மரணம்

இந்த நடவடிக்கைக்கு குற்றப் புலனாய்வுத் துறையின் ரகசியச் பிரிவு தலைமை தாங்கியது, மேலும் மத்திய மற்றும் டாங்லின் போலீஸ் பிரிவு உதவி வழங்கியது.

60க்கும் மேற்பட்ட பொது பொழுதுபோக்கு நிலையங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், உணவு&பான நிலையங்கள் மற்றும் 230 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்த சோதனை நடவடிக்கை நடந்தது.

சட்டவிரோத உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 17 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 24 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூர் to இந்தியா… பொருள் அனுப்பிய ஊழியர்: கார்கோ கட்டணம் S$500 – 15 மாதங்களுக்கு மேலாகியும் பொருள் போய் சேரல.. போலீசில் புகார்