சிங்கப்பூர்: பிஷான் ஸ்ட்ரீட் 22ல் டாக்ஸி மோதி ஏற்பட்ட விபத்தில் 77 வயது முதியவர் உயிரிழந்தார் என செய்தி வெளியாகியுள்ளது.
அவர் டிசம்பர் 2ஆம் தேதி காலை 6 மணிக்கு தனது வீட்டில் இருந்து யிஷூனுக்கு பேருந்தில் புறப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
அவர் சாலையைக் கடக்கும்போது, டாக்சி அவர் மீது மோதி இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கார் மோதியதில் அந்த ஆடவர் 10 மீ தூரம் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 67 வயது டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
அதிரடி சோதனையில் சிக்கிய 6 பேர் – குற்றம் உண்மையா… தொடரும் விசாரணை