புங்கோலில் வாள் வீசி பொதுமக்களை அலறடித்த ஆடவர் – கடைசியில் நடந்த ட்விஸ்ட்

புங்கோலில் வாள் வீசி பொதுமக்களை அலறடித்த ஆடவர் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

புங்கோலில் உள்ள சுமங் லேனில் ஆயுதம் ஏந்திய ஆடவர் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் அதை சுழற்றியதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் தீயாக பரப்பப்பட்டது. அவர் அந்த வாளை சாலையில் இழுத்துச் செல்வதையும் வீடியோவில் காண முடிந்தது.

வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் Yahoo நிறுவனம்

சாலை ஓரத்தில் நிற்பவர்களை வாளை காட்டி மிரட்டுவதையும் அதில் காண முடிந்தது.

மேலும் கார் ஒன்றின் முன் விழுந்த அவர், பின்னர் எழுந்து காரில் இருந்து வெளியே இறங்கிய பெண்ணை நோக்கி வாளை சுழற்றியதையும் அதில் காண முடிந்தது.

அதற்கு அச்சத்தில் அந்த பெண் பலமாக கத்துவதையும் காண முடிந்தது.

இந்நிலையில், சமீபத்திய இந்த வாள் ஏந்திய நபர் ஞாயிற்றுக்கிழமை புங்கோலில் நடந்த படப்பிடிப்பு குழுவினரில் ஒருவர் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இது உண்மையான சம்பவம் அல்ல என்றும் புங்கோல் வெஸ்ட் எஸ்எம்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன் சூலிங் ஃபேஸ்புக்கில் கூறினார்.

தனது மனையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டு ஆடவர் விபத்தில் சிக்கி மரணம்