பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சரத்பாபு சிகிச்சைப் பலனின்றி இன்று (மே 22) உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
சரத்பாபுவின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, முள்ளும் மலரும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில், முத்து, அண்ணாமலை திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. மேலும், வசூல் சாதனையையும், அத்தகைய படங்கள் படைந்த்திருந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.