தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் வந்துள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில் குமார் இ.ஆ.ப. ஆகியோரும் இங்கு வந்துள்ளார். சாங்கி விமான நிலையம் வந்த அமைச்சருக்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடைப் போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள்.
சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை: பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம்
அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் அதிகாலை நேரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் அமைச்சருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
மார்சிலிங் கிரசன்ட்டில் தீ விபத்து: குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் பல்வேறு சிறப்புகள் இருப்பினும், அந்நாட்டின் ஆட்சி மொழிகளான தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீனா ஆகியவற்றின் எழுத்துக்களை சேர்த்து கோர்த்து நினைவு சின்னம் ஒன்றை நிறுவியுள்ளனர்.இன்று காலை சிங்கப்பூர் நண்பர்களுடன் அப்பெருமைமிகு அடையாளத்தின் முன் ‘கர்வத்துடன்’நின்றோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.