சிங்கப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்த ஊழியருக்கு ஒமைக்ரான் ?

who came to Chennai from Singapore was arrested

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த தமிழக ஊழியர், தன் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு வந்தார்.

அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் “நெகட்டிவ்” முடிவு வந்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி இந்த பகுதிகளுக்கு தனிமை இல்லாமல் செல்லலாம்!

அதன் பின்னர், அரசு வழிகாட்டுதலின்படி அவர் 1 வாரம் வீட்டு தனிமையில் இருந்துள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட கிருமி பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் அவருக்கு உள்ளதாக கூறப்பட்டது.

அதன் பின்னர், ஊழியரின் இரத்த மாதிரிகள் சென்னை ஒமைக்ரான் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும், அவர் வீட்டிலேயே தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கிருமி தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுக்காக இவர்களின் மாதிரிகளும் அனுப்பட்டுள்ளன.

அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு முழு கிருமிநீக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

உடல் நசுங்கி உயிரிழந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு 3 குழந்தைகள் – உதவும் உள்ளங்கள் முன்வரலாம்!