தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி இந்த பகுதிகளுக்கு தனிமை இல்லாமல் செல்லலாம்!

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தனிமை இல்லாமல் செல்ல முடியும்.

அடுத்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) முதல் மூன்று நாள் தனிமையில் இல்லாமல் சிங்கப்பூரர்கள் அந்த பகுதிகளுக்கு பறக்க முடியும்.

சிங்கப்பூரர்களில் மிகவும் போற்றப்படும் மனிதர் “பிரதமர் லீ” – ஆய்வின் தகவல்

இந்த முயற்சியானது மூன்று வார தற்காலிக தடைக்கு பிறகு, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளுக்கு இடையே தனிமை இல்லாத இருவழிப் பயணம் தொடர உள்ளது.

சிங்கப்பூருக்கான ஆஸ்திரேலியாவின் பயண திட்டத்தின்கீழ், சுற்றுலா உட்பட அனைத்து வகையான பயணங்களையும் தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள் அந்நாட்டின் சில பகுதிகளுக்கு மேற்கொள்ள முடியும்.

சிங்கப்பூர் அல்லாதவர்கள் உட்பட தகுதியான பயணிகள் அனைவரும் VTL திட்டத்தின்கீழ் தனிமை இல்லாமல் சிங்கப்பூருக்குத் திரும்பலாம்.

உடல் நசுங்கி உயிரிழந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு 3 குழந்தைகள் – உதவும் உள்ளங்கள் முன்வரலாம்!