சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு சென்ற ஊழியர் ஒருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மே 9 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தது.
அதிகாரிகள் வழக்கம் போல பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
புதுக்கோட்டை, திருமயம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற ஊழியரான அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் வந்து சென்றது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.