ஒன்பது நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று (மே 23) காலை 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் புறப்பட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 03.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்தார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியைத் திருத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்!
சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் வரவேற்பு அறையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. அதேபோல், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி உள்ளிட்டோரும் முதலமைச்சரை வரவேற்றனர்.
Singapore Pools கடையில் டிக்கெட் வாங்க சென்றவருக்கு அடி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்
சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருக்கிறார்.