Tampines மாலில் லிப்ட்காக ஏற்பட்ட சண்டை… ஒருவர் மீது தாக்குதல் – போலீசாருக்கு சென்ற புகார்

Tampines mall man attack
Stomp

தெம்பனீஸ் மாலில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று லிப்டைப் கைவைத்து பிடிக்க மறுத்ததாக இருவருக்குள் சண்டை ஏற்பட்டது.

அதில் ஆடவர் ஒருவர் மற்றொருவரின் முகத்தில் குத்தியதாகவும், குழந்தையின் தள்ளுவண்டியை வைத்து அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இவரை காணவில்லை… வாசகர்கள் உதவி செய்யுங்கள்

இது செஞ்சுரி ஸ்கொயர் லிப்டில் காலை 10.45 மணிக்கு கீழ்தளத்தில் இரண்டு கார் பார்க்கிங்கில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அன்று காலை 10.55 மணியளவில் 4 தெம்பனீஸ் சென்ட்ரல் 5 இல் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீஸ் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் மிதந்த சடலம் – 24 வயதுமிக்க ஆடவர் யார்?