தன்ஜோங் பகர் மற்றும் ஹாலந்து-புக்கிட் தீமா பகுதிகளில் உள்ள சுமார் 300,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் நகர மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்ஜோங் பகார் நகர மன்றத்தின் புதிய சிறப்பு திட்டத்தில், அதிக ஸ்கை பாலங்கள், தடுப்புகள் இல்லா சறுக்குப் பாதைகள் மற்றும் வெளிப்புற லிஃப்ட் ஆகியவை உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மற்ற இனத்தை சேர்ந்தவரை தாக்கிப் பேசும் சம்பவம் ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு – அமைச்சர் சண்முகம்..!
பொதுமக்களின் நடை பயணத்தை மேலும் எளிதாக்குவது இதன் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. அத்துடன் இயற்கையின் அழகை மேலும் அதிகரிக்கச்செய்வது முக்கியமான நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சைக்கிள் பாதைகளை மேம்படுத்துவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கையில் வயதானோர் ஈடுபடுவதை உறுதி செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக, தன்ஜோங் பகர் மற்றும் ஹாலந்து-புக்கிட் தீமா பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களின் கருத்துகளை, குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : வியக்கத்தக்க ‘நெருப்பு வளையம்’ கொண்ட சூரிய கிரகணம் – கண்டு ரசித்த மக்கள்..!