சிங்கப்பூரில் தீ பற்றி எரிந்த டாக்ஸி.. இந்த ஜன. மாதத்தில் ஏற்பட்ட 4வது தீ சம்பவம்

Stomp

பிளாக் 728 ஆங் மோ கியோ அவென்யூ 6இல் இன்று வெள்ளிக்கிழமை (ஜன. 14) கார் ஒன்றில் தீப்பிடித்தது.

நள்ளிரவு 12.15 மணியளவில் வாகனத்தின் என்ஜின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஸ்டாம்பிடம் தெரிவித்தது.

லேப்டாப் வாங்க வசதியில்லா வெளிநாட்டு ஊழியர்: நன்கொடை செய்த IRR அமைப்பு… இரட்டை சம்பளத்தில் வேலை பெற்று அசத்தல்

இந்த சம்பவத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தீ பற்றி எரியும் வாகனத்தின் புகைப்படங்களை ஸ்டாம்ப் வாசகர் பகிர்ந்துள்ளார்.

இந்த மாதத்தில் இதே போன்று ஏற்பட்ட நான்காவது சம்பவம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 12வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர்: “விழுந்தால் என்ன ஆவது”- நெட்டிசன்கள் கவலை