விபத்தில் டாக்ஸியின் பின் இருக்கையில் சிக்கிய இருவரை போராடி மீட்ட SCDF வீரர்கள்

taxi traffic accident SCDF
(Photo: SCDF)

புக்கிட் திமா சாலை மற்றும் Selegie சாலை சந்திப்பில் இன்று (ஜூலை 10) டாக்ஸி மற்றும் கார் இடையே விபத்து ஏற்பட்டது.

இதில் பின்னிரவு 2.50 மணியளவில் உதவி வேண்டி சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) அழைப்பு வந்ததாக அது கூறியுள்ளது.

தடுப்பூசி போட்ட பின் இதய கோளாறுகள் ஏற்படுகின்றனவா?

டாக்ஸியின் பின் இருக்கையில், ஒருவர் மேல் ஒருவர் என இரண்டு பேர் சிக்கியதாகவும் SCDF கூறியுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு பேரிடர் உதவி, மீட்புக் குழு (DART) வரவழைக்கப்பட்டது. சிக்கியவர்களை மீட்க, டாக்ஸியின் முகப்பு கண்ணாடி வெட்டி எடுக்கப்பட்டது.

இந்த மீட்பு நடவடிக்கை சுமார் ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இரண்டு பேர் பல போராட்டத்திற்கு பிறகு காயங்களுடன் மீட்கப்பட்டு, டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.