சிங்கப்பூரில் 13 ஆண் மாணவர்களிடம் (CCA) தகாத முறையில் நடந்துகொண்ட ஆசியர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் இடைநிலைப் பள்ளி ஆசிரியரான 40 வயதுமிக்க அவர் திருமணமானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2018 வரை தனது மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு, அவர்களுடன் ஆபாசமான முறையில் பேசியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அந்த மாணவர்களுக்கு 13 முதல் 25 வயது வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 5 சிறுவர்கள் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளை அவர் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார்.
மற்ற எட்டு சிறுவர்களையும் சேர்த்து மொத்தம் 23 குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கூடுதலாக அவருக்கு S$2,500 அபராதமும், எட்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.