சிங்கப்பூரில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட எட்டு ஆடவர்கள் மீது நவம்பர் 1 அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
19 முதல் 66 வயதுக்குட்பட்ட அவர்கள் தனித்தனியான சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை
அதில் 19 வயது இளையர் ஒருவரும் அடங்குவார், இவர் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு வெவ்வேறு பெண்களை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபர் 24 அன்று, Cecil ஸ்ட்ரீட்டில் உள்ள கிளப்பின் நுழைவாயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் அவ்வாறு செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் இளையரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
அவர் மீது மானபங்கம் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய மேலும் 7 ஆடவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெறும் S$1 கொடுத்து S$56 லட்ச வெள்ளியை தட்டிச்சென்ற நபர் – முழுத்தொகையும் அவருக்கே