சிங்கப்பூரில் தந்தையை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் 14 வயது இளையர் கைது!

19-year-old arrested suspected murder his father Yishun Avenue4

தனது 49 வயது தந்தையை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 14 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளது.

லோயங் (Loyang) பகுதியில், Flora ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலை 10.10 மணியளவில் காவல்துறை உதவி வேண்டி அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று பாதிப்பு – MOH

மேலும் காவல்துறை அங்கு வந்ததும், அந்த ஆடவர் காயமடைந்து அசைவில்லாமல் கிடந்ததை கண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து, அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் மயக்கதில் இருந்ததாகவும், பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்திலேயே அந்த இளையர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் இன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் ஒன்றுகூடல் தொடர்பாக 53 பேர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…