கொள்ளையில் ஈடுபட்டு, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 9:20 மணியளவில் அரப் ஸ்ட்ரீட் பின் பாதையில் நடந்த இந்த தாக்குதலில், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு ஆடவர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
பாலியல் சேவைக்கு பணம்… சிக்கிய யூடியூபர் – சிறையில் அடைத்த சிங்கப்பூர்
அதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ரொக்க பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்ததாக கூறப்பட்டுள்ளது.
மிரட்டலுக்கு பயந்து, பாதிக்கப்பட்டவர்கள் S$20 மற்றும் ஒரு கைபேசியை அந்த கொள்ளை குழுவிடம் ஒப்படைத்தனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.
அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் சில உள் காயங்களும் மற்றும் கீறல்களும் ஏற்பட்டன.
அதனை அடுத்து அந்த நான்கு இளம் குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு அதே நாளில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருட்டில் ஈடுபட்டு, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட உள்ளது.
தந்தைக்கு ஆதரவாக மற்றொரு நபரை தாக்கிய ஆடவர்; உதிரம் சொட்ட சொட்ட சண்டை