கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, நவம்பர் 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை, மாலைகளில் சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களான ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடைகள், சூடான சமோசாக்களை வழங்கிய ‘ItsRainingRaincoats’!
அதைத் தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
அத்துடன், கோயில்களில் மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.