“சுத்தியலை வச்சி மண்டையை உடைச்சிருவேன்” – பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல்

threatening-workers restaurant-owner-arrested

பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்த உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 தெம்பனீஸ் அவென்யூவில் உள்ள உணவகத்திற்கு வெளியே இரண்டு சாலை ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.

Beng Poh Eating Houseன் உரிமையாளரான அவர், ஊழியர் ஒருவரைத் தள்ளிவிட்டு, தரையில் இருந்து ஒரு சுத்தியலை எடுக்கும் காட்சிகள் வீடியோவில் சிக்கியது.

Work permit ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம் – 2 நாள் சலுகை

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் கலவரம் – 9 பேர் சிக்கினர் (Video)

ஊழியரின் தலையை சுத்தியலால் அடித்து உடைப்பேன் என உரிமையாளர் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) மாலை 4.33 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்த 64 வயதுடைய அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.