கலகத்தில் ஈடுபட்டதாக மூன்று இளைஞர்கள் கைது – மற்றவர்களை தேடும் பணி தீவிரம்

three-arrested-coleman-street-fight
Photo: Singapore Police Force

பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதில் ஒருவருக்கு 16 வயது, இன்னொருவருக்கு 25 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது பெண்ணின் சடலம் – பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கமெண்ட்

கடந்த செப்.24 அன்று பிற்பகல் 3:17 மணிக்கு கோல்மன் ஸ்ட்ரீட்டில் உள்ள கிளப்பில் ஆயுதங்கள் ஏந்தி சண்டை நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், 29 மற்றும் 43 வயதுடைய இருவரை அவர்கள் தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் சம்மந்தப்பட்ட மற்றொரு 16 வயது இளையர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்