ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்க முயன்ற சந்தேகத்தின்பேரில் 57 வயது ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் ஜன.9 ஆம் தேதி, காலை 11 மணியளவில் லோரோங் 6 தோ பாயோவில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தோ பாயோவில் உள்ள HDB Hub இன் கார் பார்க்கிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய பெண்ணுக்கு வலது கையில் கீறல், வயிற்றில் கீறல்கள், வலது கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது அந்த நபர் கத்தியை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட 24 மணி நேரத்திற்குள், போலீசார் அவரை கைது செய்தனர்.