தோ பாயோவில் மது அருந்திக் கொண்டிருந்த குழுவினரிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) அதிகாலையில் சண்டை மூண்டது.
அதிகாலை 3.30 மணியளவில் பிளாக் 75 தோ பாயோ லோரோங் 5இல் நடந்த இந்த சண்டை குறித்து ஸ்டோம்ப் குறிப்பிட்டுள்ளது.
அதில் ஒன்பது பேர் கொண்ட குழு சண்டையில் ஈடுபட்டதாவும் கூறப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 20 வயது இளைஞர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்டாம்ப் பகிர்ந்த காணொளிகளில், பல ஆண்கள் சத்தமிடுவதையும், போலீசார் அவர்களை பிரிக்க முயற்சித்த போது அந்த இடத்தில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும் காண முடிகிறது.
தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறுதல் மற்றும் மதுபானக் கட்டுப்பாடு சட்டத்தை மீறியமை போன்ற வழக்குகள் குறித்து போலீசார் அவர்களை விசாரித்து வருகின்றனர்.