லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட் வரலாற்று வெற்றி… S$13 மில்லியனை தட்டி தூக்கியவர் இந்தியரா? – ஊகிக்கும் நெட்டிசன்கள்

feb-2024-toto-reunion-draw

சிங்கப்பூர் டோட்டோ குலுக்களில் பிரம்மாண்ட வரலாற்று வெற்றியை பெற்றவர் குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முதல் பரிசான S$13,077,918 வெள்ளியை அந்த ஒரே ஒரு அதிஷ்டசாலி நபர் தட்டிச்சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

இறுதியாக நடந்த மூன்று டோட்டோ டிராவிலும் யாரும் வெற்றி பெறவில்லை என்பதால் முதல் பரிசு பிரம்மாண்ட உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், முதல் பரிசை தட்டி தூக்கிய அந்த டிக்கெட், லிட்டில் இந்தியா அருகில் உள்ள பிளாக் 681 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள Rangoon Provision Shop கடையில் வாங்கப்பட்டது.

அந்த பகுதியில் பெரும்பாலும் இந்தியர்கள் தான் அதிகம் வசிப்பார்கள், அதனால் அவர்கள் தான் வெற்றிபெற்று இருப்பார்கள் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது.

சிங்கப்பூர் வரலாற்றிலேயே குலுக்களில் மிக பெரிய தொகை வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

அவர் வெற்றி பெற்ற டிக்கெட் Quick Pick System 8 முறையில் வாங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!