துவாஸ் சவுத் அவென்யூ 3ல் கனரக லாரி மோதியதில் 33 வயது ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
கடந்த புதன்கிழமை (மே 24) அன்று மதியம் 12.06 மணியளவில் துவாஸ் வெஸ்ட் சாலையை நோக்கி செல்லும் வழியில் கனரக வாகனம் மற்றும் பாதசாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வேலையிடத்தில் விபத்து… லிப்ட், இயந்திரத்தில் சிக்கி இரு ஊழியர்கள் மரணம்
இதனை அடுத்து அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்த நிலையில் 41 வயதான கனரக லாரி ஓட்டுநர் விசாரணையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் காட்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்களிலும் பரவலான பகிரப்பட்டு வருகிறது.