அட்மிரால்டியில் விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த குடியிருப்பாளர்கள் அருகிலேயே மரம் விழுந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அவர்கள் நடு-இலையுதிர்கால விழாவை கொண்டாடும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணிக்குப் பிறகு செம்பவாங் டவுன் கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழுந்த அந்த மரம் 10 மீட்டர் உயரம் கொண்டது என்றும், அது வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த பணியில் கிரேன் மற்றும் ஐந்து ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர், பின்னர் இரவு 10.45 மணியளவில் மரம் அகற்றப்பட்டது.
மரம் விழுந்தபோது பலத்த காற்றோ பலத்த மழையோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.