சிலேத்தார் விரைவுச்சாலையில் (SLE) மரம் ஒன்று விழுந்த சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கடந்த செப்.13 இரவு 7.10 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாகக் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
“வெளிநாட்டவர்கள் இதை மறதியாக கூட செய்யாதீர்கள்” – அபராத எச்சரிக்கை பெற்ற வெளிநாட்டவரின் எச்சரிக்கை
உட்லண்ட்ஸ் அவென்யூ 2 வெளியேறும் வழிக்கு முன்பாக, புக்கிட் திமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் வழியில் சிலேத்தார் விரைவுச்சாலையில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய காணொளி SG Road Vigilante YouTube சேனலில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் செப். 14 ஆம் தேதி காலை மரம் அப்புறப்படுத்தப்பட்டதாக NParks கூறியது.
2019 முதல் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 400 வழக்குகள் இதுபோன்று பதிவாகின்றன என்றும் அது கூறியுள்ளது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்