திருச்சி விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இருந்து சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது – விசாரணையில் 48 பெண்கள்
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த ஆண், பெண் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ 15 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 61 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேபோல், கம்பி வடிவில் தங்கத்தைப் பயணிகள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.
தங்கத்தைக் கடத்தி வந்த பயணிகள் இருவரையும் திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைகுப்புற கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளான லாரி – இருவர் மருத்துவமனையில் அனுமதி
கடந்த சில நாட்களாக, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளிடம் கடத்தல் தங்கம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.